பண மோசடி வழக்கில் திமுக அமைச்சர் மீது மீண்டும் விசாரணை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி, கடந்த 2011-15 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். 

அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 5 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இதற்கிடையே, பண மோசடி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க கூடாது என்றும், வழக்கில் தங்களையும் வழக்கில் இணைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று, அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து, அவருக்கு எதிரான நிலுவையில் உள்ள இரண்டு முதல் தகவல் அறிக்கை மீது மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

மேலும், அமலாக்கத் துறையின் கோரிக்கையும் நிராகரித்து, மனுவையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Minister SenthilBalaji Money Laundering Case Oct 2022


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->