பஞ்சாயத்து முடிந்தது! திமுக - விசிக விரிசலா? திருமவளவன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பேட்டிகள், திமுக - விசிக கூட்டணியிடையே பெரும் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இடம்பெருமா என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்பி உள்ளனர்.

ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு விசிக தலைமை கண்டனம் தெரிவிக்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுக தரப்பிலிருந்து எழுந்து வருகிறது. 

திமுகவின் ஆதரவாளர்கள் ஆதாம் அர்ஜுனாவின் கருத்துக்கு கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதே சமயத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் அடிமட்ட தொண்டனின் கருத்தை தான் ஆதவ் அர்ஜுனா பேசி உள்ளதாக விசிக-வின் சில நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தெரிவிக்கையில், திமுக - விசிக கூட்டணி கட்சிகள் இடையே எந்த விரிசலும் இல்லை, எந்த சலசலப்பும் இல்லை, அப்படி விரிசல் உருவாவதற்கு வாய்ப்பு இல்லை. 

என்னுடைய சமூக ஊடாக பக்கத்தில் பதிவான ஒரு காணொளி, ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கும் என்ற இந்த கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டார்கள். 

அந்த விவாதம் மேலும் மேலும் விவாதத்திற்கு இடம் அளித்து விட்டது. அதனால் திமுக - விசிக இடையே எந்த சிக்கலும் விழாது எழுவதற்கும் வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK VCK Alliance Thirumavalavan Adav Arjuna


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->