அப்படி போடு! தமிழகத்தில் காலாண்டுத்தேர்வு விடுமுறை நீட்டிப்பு! அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத்தேர்வு விடுமுறையை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து வருகின்ற அக்டோபர் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், அக்டோபர் ஏழாம் தேதி தான் திறக்கப்படும் என்று தற்போது பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

காலாண்டு விடுமுறை நாட்களை நீட்டிக்க ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பள்ளி கல்வித்துறை தரப்பில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதன் மூலம் தமிழக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Schools Quarterly Holiday Announce


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->