சிக்கலில் சிக்கிய சித்தராமையா! அதிரடியில் இறங்கிய அமலாக்கத்துறை! அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நில ஒதுக்கீடு விவகாரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

வழக்கும், பின்னணியும்:

கடந்த 2021ம் ஆண்டு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக, முதலமைச்சர்  சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் அனுமதி வழங்கினார்.

ஆளுநர் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில்  சித்தராமையா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, முடா ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த  புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதது.

இதனையடுத்து, பழைய சி.ஆர்.பி.சி. சட்டப்பிரிவில் மைசூர் லோக் ஆயுக்தாவில் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை முன்வைத்து அமலாக்கத்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தற்போது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED Case File against Karnataka CM Siddaramaiah Congress


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->