ஆவேச பேச்சு!!!சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம்....!!!
Edappadi Palaniswami who walked out of the Legislative Assembly told reporters
தமிழக சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த தி.மு.க எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அதில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது," சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து என் தலைமையில் அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம். தமிழகத்தில் அன்றாடம் கொலைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதுதான் இந்த ஸ்டாலின் மாடல் அரசின் சாதனைப் பட்டியல்.

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை சம்பவத்தில் புகார் கொடுத்தவரிடம் போலீஸ் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளது. அதன் விளைவாக அந்த நபர் உயிரிழந்தார்.
ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு நிகராக செயல்பட்ட தமிழக காவல்துறை இன்று கட்டுப்பாட்டில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.இது தற்போது இரு கட்சியினர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.
மாறி மாறி இருக்கட்சியினரும் குற்றம்சாட்டிக்கொள்வதை மற்ற கட்சியினர் வேடிக்கையாக பார்க்கின்றனர்.
English Summary
Edappadi Palaniswami who walked out of the Legislative Assembly told reporters