ஓ பன்னீர்செல்வத்தால் வந்த வினை.. நீதிமன்றத்தின் கதவை தட்டிய எடப்பாடி பழனிசாமி.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வந்த நிலையில், நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 16 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது. 

இதனிடையே, ஓ பன்னீர்செல்வம் நேற்று அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அப்போது தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கற்களை வீசி ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திக் கொண்டன. அதன் பிறகு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தடியடி நடத்தி கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். 

அதன்பிறகு, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தர்ணா போராட்டம் நடத்தினர். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்துறையினர் வந்து, அலுவலத்திற்கு சீல் வைத்தனர். தற்போது அதிமுக அலுவலகம் முன்பு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படாத வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை வைத்த சீலை அகற்ற உத்திரவிட கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps petition to remove seal on admk head office


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->