#BREAKING : இபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் கைது.. காவல்துறை அதிரடி.!!
EPS Supporters arrest in today
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. அதையடுத்து, 11 ஆம் தேதி (இன்று) பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்தது.
இந்த பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேற்கொண்டு வந்தனர்.
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பு வழங்கினார். அதன்படி, அதிமுக பொது குழுவிற்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக பொது குழுவிற்கு தடை விதிக்க வேண்டுமென ஓபிஎஸ் கோரிக்கை விடுத்த நிலையில், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்கப்பட்டு அதிமுக பொது குழுவிற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையே, ஓ பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அப்போது தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கற்களை வீசி ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திக் கொண்டன. அதன் பிறகு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தடியடி நடத்தி கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர்.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட இபிஎஸ் ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாவட்ட செயலாளர் வி.என்.ரவி உட்பட பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
English Summary
EPS Supporters arrest in today