#BigBreaking || எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் அதிமுக அணிவகுக்கும் - சற்றுமுன் முன்னாள் அமைச்கர் அதிரடி பேட்டி.!  - Seithipunal
Seithipunal


திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சற்று முன்பு பேட்டியளித்துள்ளார்.

ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என்று பலரும் அதையே விரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அதிமுகவில் 90% பேர் அதிமுகவில் ஒற்றை தலைமையாக எடப்பாடி கே பழனிசாமி தான் வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எடப்பாடி கே பழனிசாமி அவரின் இல்லத்தில் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,

"திட்டமிட்டபடி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற இருபத்தி மூன்றாம் தேதி நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. 

கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர் பின்தொடர நான் முடிவு செய்துள்ளேன். எந்த இடத்திலும் எதிர்மறை இல்லாத ஒரு ஆட்சியை நடத்தி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

எத்தனை வழக்குகள் வந்தாலும் அதனை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவோம், எடப்பாடிபழனிசாமி பின்னால் அதிமுக அணி வகுக்கும்" என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ex minister full support to eps for admk head


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->