அவர் இப்போது தெய்வக்குழந்தை .. அவரை திட்ட முடியாது! பிரகாஷ் ராஜ்!! - Seithipunal
Seithipunal


ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன் , காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு போன்ற விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அவ்விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் பிரகாஷ்ராஜ் பேசியதாவது, " நான் அரசியல் மற்றும் தேர்தல் குறித்து பல இடங்களிலும் பேசி வருகிறேன். 

இந்நிலையில் திருமாவளவனை நான் நேரில் சந்தித்த போது இப்போதெல்லாம் எந்த அரசியல் மேடைகளிலும் என்னை பார்க்க முடியவில்லை என்று கேட்டார். அதன் பின்னர் எனக்கு ஒரு விருது கொடுக்க வேண்டும் என்றும், அது விசிக கட்சி சார்ந்த விருது என்றும் கூறினார். 

என்னால் எந்த கட்சிக்கும் சார்பாக இருக்க முடியாது. ஆனால்  உங்கள் கொள்கையும் என் கொள்கையும் ஒன்று தான். எனவே நான் உங்கள் விருதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினேன். என்னை வளர்த்த இந்த சமுதாயத்துக்கு ஒன்று என்றால் குரல் கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை. 

அம்பேத்கர், காரல் மார்க்ஸ் ஆகியோரை நான் படித்ததால் இந்த எண்ணம் எனக்கு வந்துள்ளது. நான் பிரதமர் மோடியை கடந்த 10 ஆண்டுகளாக எதிர்த்து வருகிறேன். இப்போது அவர் தெய்வக் குழந்தை. அதனால் அவரை நான் திட்டக் கூட முடியாது" என்று பகடியாக பேசியுள்ளார் பிரகாஷ் ராஜ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

He is God child actor prakash raj speech


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->