வரலாறு படைக்கும் ஜம்மு-காஷ்மீர் தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையர் மகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு முதல் கட்ட சட்டசபை தேர்தல் கடந்த 18-ம் தேதி  நடைபெற்றது.

அந்தவகையில் காஷ்மீரில் 16 தொகுதிகள் மற்றும்  ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் அங்கு 2ம் கட்ட சட்ட சபை தேர்தல் தொடங்கியாது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
 ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் இன்று வாக்குப்பதிவு முழுமையாக சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பொறுமையாக வரிசையில் நின்று தங்கள் உரிமையைப் பயன்படுத்த காத்திருப்பதையும் பார்க்க முடிவதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் தேர்தலுக்கு இடையூறு செய்த பகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு நடைபெறுவதாக தெரிவித்த அவர், இதன்மூலம் ஜம்மு காஷ்மீரில் வரலாறு உருவாகி வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பது பாராட்டுக்குரியது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

History making Jammu and Kashmir elections Chief Election Commissioner happy


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->