இந்த விஷயத்துல ஓபிஎஸ் தாங்க ஃபர்ஸ்ட் - அதிமுக தரப்பில் பரபரப்பு பேச்சு.!
jeyakumar say about dmk admk ops
இந்து சென்னையில் நடைபெற்று போராட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஜெயக்குமார், போராட்டத்தின் போது பேசியதாவது, "எந்த நிலையிலும் சசிகலா, டி.டி.வி.தினகரனை அதிமுக.,வில் இணைக்க நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
ஓபிஎஸ்-க்கு 80% ஆதரவு இல்லை, வெறும் 80 பேர் மட்டுமே உள்ளனர். அவரால் முடிந்தால் ஒரு ஆயிரம் பேரை திரட்டி போராட்டம் நடத்தி காட்டட்டும்.
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளித்த தேனீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், 'பந்திக்கு முந்தி போ, படைக்கு பிந்தி போ' என்பது போல அனைத்து இடங்களிலும் ஓபிஎஸ் தரப்பு முதலில் போய் உட்கார்ந்து விடுகிறது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு தினமும் 'போட்டோ ஷூட்' மட்டும் தான் முக்கியமான பணியாக இருந்து வருகிறது.
அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை தான் தற்போதைய திமுக திறந்து வைத்து கொண்டு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியாக சொன்ன நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை, கியாஸ் சிலிண்டருக்கு மானியம் ரூ.100 கொடுக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்தார்களா?" என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
English Summary
jeyakumar say about dmk admk ops