கள்ளக்குறிச்சி சம்பவம் : "விஜயைப் பார்த்ததும் அழுகை வந்துருச்சு.." விஜய் காலில் விழுந்த பெண் விளக்கம்..! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் விழுப்புரம், சேலம், கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரும் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப் பட்டோருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அங்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடமும் சிகிச்சை மற்றும் பாதிப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

இதனிடையே ஒரு பெண் விஜயின் காலில் திடீரென விழுந்து அழுததாக செய்திகள் வெளியாகின. இது குறித்து கூறிய அந்த பெண், " விஜயை பார்த்ததும் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் தான் நான் அவர் காலில் விழுந்து கதறி அழுதேன்.

விஜய் வந்தபோது என் கணவரின் அருகில் நான் மட்டுமே இருந்ததால் நீங்கள் யார் என்று சிலர் கேட்டனர். அதற்குரிய பதிலை தான் நான் கூறினேன். வேறு யாரும் என்னை விஜயின்  காலில் விழ சொல்லவில்லை. 
விஜயை போல் வேறு எந்த தலைவரும் எங்கள் அருகில் வந்து நின்று ஆறுதல் கூறவில்லை" என்று அந்த பெண் விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Hooch Tragedy A Women Who Fell down TVK Leader Vijays Leg Explaining For Her Action


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->