லால்குடி MLA-வுக்கும் எனக்கும் பிரச்சனையா.? அமைச்சர் கே.என் நேரு கொடுத்த ஷாக் பதில்.!! - Seithipunal
Seithipunal


லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியனுடன் ஒற்றுமையாக இருக்கிறேன் அமைச்சர் கே.என் நேரு விளக்கம்.!

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 370 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே என் நேரு பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும் பேருந்து நிலைய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் லால்குடி எம்எல்ஏவுடன் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த அவர் "நீங்க எதுக்காக கேக்குறீங்க எங்களுக்கு தெரியும். நாங்க எல்லாம் ஒற்றுமையா தான் இருக்கோம். வேணும்னா அவர் கிட்டயே கேட்டு பாருங்க. அவர் எங்களோட தான் இருக்காரு. நம்மள சுத்தி நல்லது வருது இல்லனா கெட்டது வருது. அதையே போடுங்க" என லால்குடி எம்எல்ஏ குறித்தான கேள்விக்கு அமைச்சர் கே.என் ஒரு பதில் அளித்தவாறு கடந்து சென்றார்.

சில நாட்களுக்கு முன்பு திமுக எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KNNehru explained that he has no problem with Lalgudi MLA


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->