திமுகவை தூக்கி எறிய வேண்டும் - மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


கடந்த மக்களவை பொதுத் தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் எல் முருகன், அவிநாசி பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவாளித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பு அமைத்து இருப்பது ஏதோ சாதாரண விஷயம் இல்லை. இது ஒரு சரித்திர நிகழ்வு. நம் நாட்டின் வளர்ச்சி மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் பிரதமர் மோடியை நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். 

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற விடாமல் திமுக ஆட்சி அதனை கிடப்பில் போட்டுள்ளது. மேலும் பவானியில் தண்ணீர் இல்லை என்றும் கூறி வருகிறது. இப்போது கரைபுரண்டு பவானி ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கு பவானி ஆற்று நீரை கொண்டு வர வேண்டும்.

கள்ளக்குறிச்சிகள் கள்ளச்சாராயம் அருந்தி 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் மிக மோசமாகி உள்ளது. தலைநகர் சென்னையில் தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவரை வெட்டி கொலை செய்துள்ளனர். 

இப்படி தமிழகத்தில் பல்வேறு கொலை சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே திமுகவை நாம் தூக்கி எறிய வேண்டும். தமிழகத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே நிரந்தரத் தீர்வை கொடுக்க முடியும்.

இந்த தொகுதியை நான் வெற்றி வாய்ப்பை தவற விட்டு இருந்தாலும், மக்கள் மனதில் என்றும் இடம் பிடித்துள்ளேன். அதற்கு சாட்சி எனக்கு அளித்த இரண்டு லட்சம் மக்கள் தான் என்று எல் முருகன் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

L Murugan Say About DMK Govt july 2024


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->