மகாத்மா காந்தியின் விருப்பத்தை மக்கள் நிறைவேற்றுவார்கள் - ராஜ்நாத் சிங் பேச்சு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தவகையில், ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குபதிவும் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம்கட்ட வாக்கு பதிவு நடைபெற்று முடிந்தநிலையில், மூன்றாம்கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. அனைத்துகட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், வடகிழக்கு டெல்லி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங் பேசுகையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்து காணாமல் போய்விடும்.

மக்களவை தேர்தலில் மக்கள் மகாத்மா காந்தியின் விருப்பத்தை விறைவேற்ற இருக்கிறார்கள். இந்தியாவை உலகிலேயே வலிமையான நாடாக உயர்த்த வேண்டுமென்ற மகாத்மா காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவார்கள். காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டுமென்ற மகாத்மா காந்தியின் விருப்பதை மக்கள் நிறைவேற்றுவார்கள் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahatma Gandhi vision People will fulfill Rajnath Singh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->