ஆம்ஸ்ட்ராங் கொலையில் நீளும் பட்டியல் - தேடப்படும் முக்கிய குற்றவாளி - மனைவியுடன் வெளிநாட்டிற்குத் தப்பியோட்டம்..!? - Seithipunal
Seithipunal



பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி அவரது வீட்டிற்கு அருகிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக இதுவரை 16 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. 

அதில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதையடுத்து போலீஸ் காவலில் இருந்த மற்ற குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின் படி திமுக, அதிமுக, பாஜக என பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் இந்தக் கொலையில் தொடர்பிருப்பது தெரிய வந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

இதையடுத்து கொலையாளிகள் பயன்படுத்திய பல்வேறு மொபைல் போன்கள் கூவம் ஆற்றில் வீசப்பட்டதாகத் தெரிய வந்ததையடுத்து ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் செல்போன் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் விடாது நீளும் வாலாக, தற்போது 'சம்போ செந்தில்' என்ற பெரிய ரவுடிக்கும் தொடர்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 6 வருடங்களாக  4 பல்வேறு கொலை வழக்குகளில் கைது செய்யப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சென்னையில் பழைய பொருட்கள் வாங்கி விற்கும் தொழிலைக் கைப்பற்ற ஏற்பட்ட போட்டியின் காரணமாக சம்போ செந்தில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் தேடப்படும் குற்றவாளியான சம்போ செந்தில் அவரது மனைவியுடன் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்தக் கொலையில்  இன்னும் யார், யாருக்கெல்லாம் தொடர்பிருக்கும் என்று போலீசார் குழம்பியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Main Culprit Escaped With His Wife To Abroad Who Related in Armstrong Murder


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->