எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மருத்துவ பரிசோதனை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது தமிழகத்தில் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்களும் தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே சென்னையில் நேற்று முன்தினம் மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி திடீரென மயக்கம் அடைந்தார். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  வெயில் காரணமாக மயக்கம் ஏற்பட்டதும், தண்ணீர் அளித்து மேடையிலேயே அமர வைக்கப்பட்டனர். 

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தின் போது மயங்கிய நிலையில், பரிசோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Medical Test for Edappadi palanisamy


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->