கைவிடப்பட்ட நிலையில் கரு! பள்ளி சிறுமியின் இன்ஸ்டா விபரீதம்! சிறுவன் கைது! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள அபேக்ஷா நகரின் கழிவு நீர் வடிகாலில் மனித கரு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 9-ஆம் தேதி, கழிவு நீர் வடிகாலின் அருகே பறவைகள் சுற்றி வந்ததைப் பார்த்த மக்கள், காரணம் தேடி அங்கு தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, கைவிடப்பட்ட நிலையில் மனித கரு கிடப்பதை கண்டு அதிர்ந்த மக்கள், கருவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்களின் பரிசோதனையில் அது ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகத் தெரியவர, இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  

விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி சிறுமி, 17 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்ததையும், இதில் சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது. 

பின்னர் சிறுவன் மும்பைக்கு சென்று, அங்கிருந்தபடியே சிறுமிக்கு கருச்சிதைவு மாத்திரைகளை அனுப்பியதும், மாத்திரை சாப்பிட்ட சிறுமி வீட்டிலேயே கருச்சிதைவுக்குள்ளானதாகவும், அதைத் தூக்கி வடிகாலில் வீசியதும் உறுதிசெய்யப்பட்டது. 

இதனையடுத்து மருத்துவ பரிசோதனை மூலம் சிறுமியின் கர்ப்பத்தை உறுதி செய்த போலீசார், சிறுவனை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

girl pregnant boy arrest police investigation 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mumbai Insta love case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->