NCW தலைவி குறித்து இழிவான கருத்து.. திரிணாமுல் எம். பி. மஹுவா மொய்த்ரா மீது வழக்குப் பதிவு..!! - Seithipunal
Seithipunal



திரிணாமுல் காங்கிரஸ் எம். பி. மஹுவா மொய்த்ரா தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா குறித்து மிக இழிவான கருத்தை பேசியதற்காக அவர் மீது தேசிய மகளிர் ஆணையம் (NCW ) வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 2ம் தேதி உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மீக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா ஜூலை 4 ம் தேதி ஹத்ராஸ் சென்றிருந்தார்.

அப்போது அவருக்கு யாரோ ஒருவர் குடை பிடித்திருப்பதைப் போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்  வெளியாகின.இதைப் பார்த்த நெட்டிசன்கள் NCW தலைவரால் தனது குடையைக் கூட பிடிக்க முடியவில்லை என்று கிண்டல் செய்து கேள்வி எழுப்பி இருந்தனர். 

அதற்கு ரேகா சர்மா தான் குடைக்குள் நிற்கவிலை என்று பதிலளித்திருந்த நிலையில்,  திரிணாமுல் காங்கிரஸ் எம். பி. மஹுவா மொய்த்ரா NCW தலைவி குறித்து மிக இழிவான வகையில் ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார். 

இதையடுத்து மஹுவா மொய்த்ராவின் கருத்தைக் கண்டித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் டெல்லி கமிஷனர் சஞ்சய் அரோரா ஆகியோருக்கு NCW தலைவர் ரேகா சர்மா கடிதம் எழுதியுள்ளார். மேலும் எம். பி. மஹுவா மொய்த்ரா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து பாஜகவும்  மஹுவா மொய்த்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NCW Initiates Legal Action Against Trinamul MP Mahua Moitra


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->