#Breaking || அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் : பொதுக்குழுவுக்கு புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்.! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் புறப்பட்டுச் சென்றனர்.

ஒற்றைத் தலைமை சர்ச்சைகளுக்கு மத்தியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெறுகிறது.

கடந்த சில தினங்களாக அதிமுகவில் நிலவி வந்த ஒற்றைத் தலைமை சர்ச்சை அக்கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தது. இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் எனவும் பொதுக்குழுவில் முன்வைக்கப்பட உள்ள வரைவு தீர்மானங்களைத் தவிர இதர விவாதங்களை எழுப்பக் கூடாது எனவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்த நிலையில் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

முன்னதாக இதுதொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பில் பொதுக்குழுவை நடத்தத் தடையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழுவில் அதிமுகவின் சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ள தடை இல்லை எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக தனித்தனியே வானகரம் புறப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

O. Panneerselvam ready for ADMK public meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->