3வது முறையாக பிரதமர் மோடி நாளை மறுநாள் பதவியேற்பு..!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இன்று மாலை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். இதையடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சியமைப்பதற்கான ஆணையை பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

இதையடுத்து ராஷ்டிரபதி பவனில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 3வது முறையாக ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கடந்த இரண்டு முறையும் எங்கள் ஆட்சியில் தொடர்ச்சியான வளர்ச்சி பாதையில் தான் தேசம் சென்று கொண்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்த 25 கோடி மக்கள் தரம் உயர்ந்துள்ளனர். தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஒரு வலுவான அரசை அமைக்கும்.

என்னை பிரதமராக நியமிக்கும் நியமனக் கடிதத்தை குடியரசுத் தலைவர் என்னிடம் வழங்கியுள்ளார். மேலும் அமைச்சரவை பட்டியலையும் குடியரசுத் தலைவரிடம் வழங்கும்படி அவர் என்னிடம் கேட்டுக் கொண்டுள்ளார். நான் நாளை மறுநாள் ஜூன் 9ம் தேதி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளேன்" என்று பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Will Take Oath On June 9 Sunday


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->