அவர்களை சும்மா விடக்கூடாது - டாக்டர் இராமதாஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் இராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து, தமிழக அரசின் கல்வி, சமூக நீதி, ஆன்லைன் சூதாட்டம், சுங்கச்சாவடி கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பதிலளித்தார். அதன் விவரம் பின்வருமாறு:

7 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக இருப்பது உயர்கல்வியை பாதிக்கும். 3192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.  

50,000 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றும் புதிய நியமனங்கள் செய்யப்படவில்லை. 658 சிறப்பு மருத்துவர்களை நேர்காணலின்றி போட்டித்தேர்வின் மூலம் தேர்வு செய்ய வேண்டும்.  

சமூக நீதி: தெலங்கானா போல இந்திய அளவில் சாதி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய காங்கிரஸ் தேசிய தலைமை வலியுறுத்த வேண்டும்.  

சுங்கச்சாவடி & போக்குவரத்து: தமிழகத்தில் மேலும் 90 புதிய சுங்கச்சாவடிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தியாவில் அதிக சுங்கச்சாவடிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. இது மக்களுக்கு பெரும் பாரமாகும்; அரசே தீர்வு காண வேண்டும்.  

இணைய சூதாட்டம்: உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு 19 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துள்ளனர். மறுபடியும் தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடர வேண்டும்.  

போச்சம்பள்ளி பள்ளி மாணவி வழக்கு:  3 ஆசிரியர்கள் 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு & காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

திருப்பரங்குன்றம் வழக்கு: 100 ஆண்டுகளாக உள்ள பிரச்சனைக்கு தீர்வாக, கடந்த கால அமைதிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Ramadoss Condemn to DMK Govt


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->