நீளும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முன்னாள் பார் கவுன்சில் நிர்வாகி இன்று ஆஜர்! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் செம்பியம் போலீசார் இதுவரை 25க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். 

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமாரிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமார் இன்று விசாரணைக்கு ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் பார் கவுன்சில் முன்னாள் நிர்வாகியிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே இந்த கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்  நிர்வாகி அஸ்வத்தாமனும், அவரின் தந்தையும், பிரபல ரவுடியுமான நாகேந்திரனும் தான் மூல காரணம் என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில்,  கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Protracted Armstrong murder case Ex Bar Council executive appeared today


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->