புதுச்சேரியில் பாஜக நிர்வாகி மீது வெடிகுண்டு வீசி கொலை.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மங்கலம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக பதவி வகிப்பவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். மேலும் இவர் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர்.

இந்த நிலையில் பாஜக நிர்வாகியான செந்தில் குமரன் வில்லியனூர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர் மீது வெடிகுண்டு வீசி, கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pudhuchery BJP Admin killed bomb attack


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->