தனது திரைப்படங்களுக்காக தி.மு.க.வை பாராட்டிய ரஜினிகாந்த்! - வி.ஜெயராமன்! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளதாக அதிமுக பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் இன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கினார் , 

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக்கு ஏன் வாக்களித்தோம் என்று பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். தேர்தலுக்கு பின்பு நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது.

இன்று தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இது தான் தி.மு.க.வின் பரிசாக உள்ளது. திருப்பூரில் தொழில் மிகவும் நசிந்து விட்டது. இதனை சரிசெய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் தனது திரைப்படங்கள் ரிலீசாக வேண்டும் என்பதற்காகவே தி.மு.க.வை பாராட்டி பேசிய ரஜினிகாந்த். தி.மு.க.,-பா.ஜ.க., இடையே ரகசிய கூட்டணி உருவாகியுள்ளது. 2 கட்சிகளும் நெருங்கி வரத் தொடங்கியுள்ளது.

அமெரிக்கா செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசின் உதவிகள் தேவைப்படுகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமைக்கு கீழ் உள்ள காவல்துறை செயல்படவில்லை.

இவ்வாறு நிகழ்ச்சியில் அவர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth praised DMK for his films V. Jayaraman


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->