தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய நடிகர்கள் - ஆந்திர அரசியலில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் படி ஆந்திராவில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலும் வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெருகிறதையடுத்து கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாநிலத்தின் நந்தியாலா சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரும் நண்பருமான ரவீந்திர கிஷோர் ரெட்டியின் வீட்டிற்கு அல்லு அர்ஜுன் தனது மனைவியுடன் வருகை தந்தார். பின்னர் அப்பகுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கணக்கான மக்கள் முன்னிலையில் ரவீந்திர கிஷோருக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தார்.

இதேபோல், காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாணை ஆதரித்து, அவரது அண்ணன் மகனான நடிகர் ராம்சரண் பிரசாரம் செய்தார். அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமன்றி, நடிகர்களும் ஒருசில கட்சிக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டது ஆந்திர அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ram saran and allu arjun election campaighn in andira


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->