நாங்க கைப்பற்றிட்டோம் ரஷ்யா அறிவிப்புக்கு., உக்ரைன் மறுப்பு., தமிழக மாணவர்கள் வசிக்கும் அந்த நகரில் உச்சகட்ட போர்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்ய - உக்ரைன் ராணுவம் இடையேயான போர் உக்கிரமடைந்து உள்ளது.

கார்கிவ் நகரில் எரிவாயு பைப் லைன் மீது ரஷ்ய ராணுவம் தற்போது தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஏவுகணைகளை வீசி ரஷ்யப் படைகள் போரினை தீவிரப்படுத்தியுள்ளது.

கார்கிவ் நகரில் போர் உக்கிரம் அடைந்து வருவதை அந்நகரில் வசிக்கக்கூடிய தமிழக மாணவர்கள் உறுதிப்படுத்தி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதற்கிடையே இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரை ரஷியப் படைகள் கைப்பற்றி உள்ளதாக ரஷ்ய இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் உக்ரைன் நாட்டை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர்கள், தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்துள்ளதாகவும் ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதே சமயத்தில் ரஷ்யப் படைகள் கார்கிவ் நகரை கைப்பற்றியதாக கூறப்படும் தகவலுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது. 

ரஷ்யப் படைகளின் தாக்குதலில் அந்நகரில் எந்த திசையிலும் வெடிகுண்டு சத்தகங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும், உச்சகட்ட போர் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Ukraine War 4th day


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->