சவுக்கு சங்கர் வழக்கு: மீண்டும் தள்ளிவைத்த உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசியதாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது இரண்டாவது குண்டாஸ் போடப்பட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தாயார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பழிவாங்கும் நோக்கில் மீன்றும் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் போடப்பட்டு இருப்பதை தெரிவித்தார்.

இதற்கு உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ் போடப்பட்டுள்ளதா? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி, சவுக்கு சங்கர் மீது மேல் நடவடிக்கை கூடாது என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த 23 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "நாங்கள் நிவாரணம் கொடுக்கிறோம் சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளி வருகிறார். பிறகு மீண்டும் நீங்கள் அவரை வேறு ஒரு வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்து, மீண்டும் சிறையில் அடைக்கிறீர்கள். 

ஏன் அவர் பின்னால் தமிழக அரசு சுற்றிக்கொண்டு இருக்கிறது? ஏன் நீங்கள் இதுபோன்று நடந்து கொள்கிறீர்கள்" என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வரும் 30 ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Savukku Shankar Gundas SC Case TNGovt DMK MkStalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->