ஆரியமும், திராவிடமும்! தமிழை சிதைக்கும் தமிழக அரசு! அம்பலப்படுத்திய சீமான்!
Seeman Say About Tamil And Dravidiam
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தாவது, "எங்களுக்கு ஆரியமும், திராவிடமும் ஒன்று தான். ஆரிய மாயை என்றார்கள் திராவிடர்கள்.
நாங்கள் ஆரியம், திராவிடம் இரண்டுமே மாயை தான் என்கிறோம். இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதனால் நாங்கள் இரண்டையும் சம அளவில் எதிர்க்கின்றோம். நான் பேசுவதையே தற்போது முதல்வரும் பேசுகின்றார்.
மொழி சிதைந்தால் இனம் அழியும், பண்பாடு அழியும் என்று நான் பல ஆண்டுகளாக பேசி வருகிறேன். அதையே அவரும் பேசுகிறார். ஆனால் அந்த மொழியைக் காக்க இவர்கள் எடுத்த முன்னெடுப்பு என்ன? இவர்கள் மொழியைச் சிதைக்கின்றார்களா? அல்லது மீட்டுருவாக்கம் செய்கின்றார்களா?
இவர்கள் விளம்பரம் செய்யும் ஒரு அரசு திட்டம், ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ என்று இருக்கிறது. அது ஏன் ‘நம் பள்ளிக்கூட கட்டமைப்பு’ என்று தமிழில் இல்லை?
சென்னை கடற்கரையில் ‘நம்ம சென்னை’ என்று இருக்கிறது. அதில் ‘நம்ம’ என்பது தமிழிலும், ‘சென்னை’ என்பது ஆங்கிலத்திலும் இருக்கிறது.
இவர்களே மொழியைச் சிதைத்துவிட்டு, நான் உளமார பேசியதை, அவர்கள் வெறும் பெயருக்காகப் பேசுகிறார்கள். இவர்களுக்கு அந்த நிர்பந்தத்தைக் கொடுத்ததே தமிழ்த்தேசிய அரசியல் தான்” என்று சீமான் தெரிவித்தார்.
English Summary
Seeman Say About Tamil And Dravidiam