சிறை செல்லும் சித்தராமையா?....இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், மைசூருவில் கடந்த 2021-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியின்  போது மைசூரு நகா்ப்புற மேம்பாட்டு ஆணைய அவுட்டில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முதலமைச்சர்  சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். அதன்படி இது குறித்து தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில்  சித்தராமையா மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற போது அனைத்து தரப்பு வாதங்ககளையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் சித்தராமையா தொடர்ந்த வழக்கில் இன்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiah is going to jail High Court verdict today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->