சுந்தரபாண்டியம் பேரூராட்சி : அதிமுகவை சேர்ந்த 7 கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்.! - Seithipunal
Seithipunal


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் வெற்றி பெற்ற 7 அதிமுக கவுன்சிலர்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 5 நகராட்சி, 9 பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. இதனையடுத்து மாற்று கட்சி கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது இந்த பேரூராட்சியில் திமுக 7 வார்டுகளையும், அதிமுக 7 வார்டுகளையும், சிபிஐ 1 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்‌.

இந்த நிலையில் சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்காக திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலையில் சுந்தரபாண்டியம் பேரூராட்சி 7அதிமுக கவுன்சிலர்களும் திமுகவில் இணைந்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sundharapandiam 7 Admk councillor join dmk


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->