த.வெ.க மாநாட்டில் பெரும் அதிர்ச்சி! உயர்ந்தது பலி எண்ணிக்கை! - Seithipunal
Seithipunal


த.வெ.க மாநாட்டில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று மாலை 4 மணியளவில் விக்கிரவாண்டி பகுதியில் தமிழக வெற்றிக் காலத்தின் மாநாடு நடைவுபெற்றது.

இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில், வெயிலின் தாக்கம் தாங்காமல் மயங்கி விழுந்த 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சார்லஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சார்லஸ் சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர்என்பதும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, இன்று காலை சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில் த.வெ.க தொண்டர் ஒருவர் பலியானார். மேலும், திருச்சியில் நடந்த சாலை விபத்தில் த.வெ.க நிர்வாகிகள் 2 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilaga Vettri Kazhagam TVK Conference one more death


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->