ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திற்கு அடுத்ததாக உசிலம்பட்டியின் தொட்டப்பநாயக்கனூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரபலமாகும்.  

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  

- மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறாத அமைப்புகள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படக்கூடாது.  
- ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும்போது காளைகளை துன்புறுத்தும் செயல்கள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.  
- போட்டிக்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் கட்டாயமாக செய்ய வேண்டும்.  
- ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் முழு நிகழ்வையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
அதன்படி, போட்டி அமைப்பாளர்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu Jallikattu TNGovt


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->