வக்பு வாரிய திருத்த மசோதா! சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினின் கொடுத்த வாக்குறுதி!
TN Assembly DMK MK Stalin
பாராளுமன்ற கூட்டுக்குழுவின் பரிந்துரைகளுடன் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேர விவாதத்துக்கு பின், நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
மசோதாவுக்கு 288 ஆதரவாகவும், 232 எதிராகவும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டதால், அது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று தமிழக சட்டப்பேரவையில் கருப்பு பேட்ஜ் அணிந்து மக்களவையில் பங்கேற்றனர்.
மேலும், சட்டசபையில், மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கடுமையாக கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அதில், வக்பு வாரிய திருத்த மசோதா எதிர்க்கப்படுவதற்கும் மேலாக, முழுமையாக திரும்பப்பெறப்பட வேண்டும். இந்த மசோதா, சில கட்சிகள் துணை நிற்க, இந்திய அரசியலமைப்பின் அடிப்படை முறைகளை கடுமையாக மீறி நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரும்பாலான கட்சிகள் எதிர்த்த நிலையிலும், சில கட்சிகள் ஆதரவுடன், அதிகாலை 2 மணிக்கு இந்த மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த திருத்தத்துக்கு எதிராக, தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
இந்த மசோதாவை சட்டபூர்வமாக எதிர்த்து வென்று, அதை அமலுக்கு வராமல் தடுக்க முழு முயற்சியும் மேற்கொள்ளப்படும்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
English Summary
TN Assembly DMK MK Stalin