வெறுப்பால் தந்தையை இழந்தேன்.. நாட்டை இழக்க மாட்டேன் - ராகுல் உருக்கமான பதிவு..!
Today Rahul Tweet
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் 'பாரத் ஜோடோ யாத்திரா' என்ற பெயரில் 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த பாதயாத்திரை 150 நாட்கள் நடக்க உள்ளது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்திற்கு சென்றார்.
அதன்பின், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில், பிரிவினை அரசியலாலும், வெறுப்பாலும் நான் என்னுடைய தந்தையை இழந்தேன். ஆனால் ஒரு போதும் நான் நேசிக்கும் இந்த நாட்டை இழக்க மாட்டேன்.
வெறுப்பை அன்பால் வெல்லலாம். பயத்தை தன்னம்பிக்கையால் வெல்லலாம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தடைகளை வெல்வோம் என தெரிவித்துள்ளார். இந்த டிவிட்டை பலரும் ரிடிவிட் செய்து வருகின்றனர்.