திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பகுதியில் ரவுடி வெட்டி படுகொலை! - Seithipunal
Seithipunal


திருச்சி ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெரு பகுதியில் இந்து காலை ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரெளடி திலீப் தரப்பைச் சேர்ந்த அன்பு என்ற நபர், மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.

பல வழக்குகளில் தொடர்புடைய அன்பு, இன்று காலை உடற்பயிற்சி செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் மர்ம கும்பலால் துரத்தப்பட்டு, சுமார் 500 மீட்டர் தூரம் தப்பி ஓடியுள்ளார். 

ஆனால் தெப்பக்குளம் பகுதியில் மடக்கி பிடிக்கப்பட்டு அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பலியான அன்புவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் திருச்சி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பழிக்கு பழி கொலை நடக்கலாம் என்பதால் போலீசார் இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trichu Sri Rangam Rowdy Murder case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->