'திராவிட மாடல்' தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கின்ற குடும்ப சுயநலக் கூட்டம் தான் நம்மளுடைய அடுத்த எதிரி - விஜய் உரை! - Seithipunal
Seithipunal


திமுக மற்றும் பாஜகவை நேரடியாக தவெக தலைவர் விஜய் தாக்கி பேசியது மட்டுமல்லாமல், அவர்கள் தான் தனது கட்சியின் முதல் இரு அரசியல் எதிரிகள் என்று தெளிவு படுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றியதாவது, "இந்த நாட்டையே பாகுபடுத்துகிற, பிளவுவாத அரசியல் செய்கின்றவர்கள் தான் தமிழக வெற்றி கழகத்தின் முதல் முழு முதல் கொள்கை எதிரி. 

அடுத்ததாக 'திராவிட மாடல்' என்று கூறி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கின்ற குடும்ப சுயநலக் கூட்டம் தான் நம்மளுடைய அடுத்த எதிரி, அரசியல் எதிரி, பொலிட்டிக்கல் எனிமி. 

கொள்கை கோட்பாட்டை பொருத்தவரை, திராவிடத்தையோ, தமிழ் தேசியத்தையோ நாம் பிரித்துப் பார்க்கப் போவதில்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பதுதான் நம்முடைய நோக்கம்.

அதனால், நாம் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள்ளும் நம்மளை சுருக்கி கொள்ளாமல், தமிழ்நாட்டு உரிமைகளை சார்ந்த இந்த மண்ணுக்கான மதச்சார்பற்ற, சமூக நிதி கொள்கை அடையாளமாக நிதி நிறுத்தி செயல்பட போகிறோம். 

ஜனநாயகம், சமூக நீதி, சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை, மாநில தன்னாட்சி, இரு மொழி ஆட்சி கொள்கை, இயற்கை வள பாதுகாப்பு, கால நிலை மாற்றத்திற்கு வளர்ச்சி, உற்பத்தி திறன், உடல்நிலை கெடுக்கும் எவ்வகை போதையும் இல்லாத தமிழகம் என்கின்ற கொள்கையின் அடிப்படையில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற புரட்சிகர தத்துவத்தின் அடிப்படையில் சம்மதர்ம சமூகத்தை உருவாக்குவது தான் நம்மளுடைய முதல் இலக்கு" என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Maanaadu Vijay Speech DMK BJP


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->