ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த சதி! பயங்கரவாதி அப்துல் ரகுமான் கைது! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயிலில் தாக்குதல் நடத்த சதி திட்டமிட்டிருந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.  

பயங்கரவாதி அப்துல் ரஹ்மான், ராமர் கோயிலை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்பு அமைப்புகள் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டன. இதன் அடிப்படையில், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் அப்துல் ரஹ்மான் கைதுசெய்யப்பட்டார்.  

அவரிடமிருந்து இரண்டு கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சதியை முறியடித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரிடம் இருந்து மேலும் தகவல்கள் பெற தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்த சம்பவம் அயோத்தி பகுதியிலும், நாடு முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரிக்க வைத்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttar Pradesh Ramar Temple some issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->