13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகணுமா ? நான் உண்மையை மட்டுமே பேசுவேன்! - அப்பாவு கூறியது என்ன?
Will you appear in court on 13th I speak only the truth What did dad say
கடந்த அதிமுக ஆட்சியில் 40-க்கும் மேற்பட்ட அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் திமுகவிற்கு வர தயாராக இருந்தநர். ஆனால் மு.க.ஸ்டாலின் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தது குறித்து, சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவை சேர்ந்த பாபு முருகவேல், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்த போது, வரும்13-ம் தேதி சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் எனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நான் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது.
ஆனால் அது தொடர்பாக எனக்கு எந்த சம்மனும் வரவில்லை என்றும், எனது தனி பாதுகாவலரிடம் சம்மன் சென்றதாகவும், அதை அவர் வாங்காமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.அதில் உண்மை இல்லை. எனினும் எனது வக்கீல்கள் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான் உண்மையை மட்டுமே பேசுவேன் என்று கூறிய அவர், அவதூறு வழக்கு தொடர்பாக வரும் 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிறேன் என்று கூறினார்.
English Summary
Will you appear in court on 13th I speak only the truth What did dad say