தாயகம் திரும்பிய இந்திய அணியினர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு..!! - Seithipunal
Seithipunal



T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவு நாடுகளில் நடைபெற்றன. அதில் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதிய இந்திய அணி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இதையடுத்து பார்படாஸில் ஏற்பட்ட புயல் காரணமாக 4 நாட்கள் தாமதமாகப் புறப்பட்டு இன்று காலை பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு அவர்களை பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா உற்சாகமாக வரவேற்றார்.

இதையடுத்து ஜெய் ஷாவுடன் இணைந்து கேப்டன் ரோஹித் சர்மா கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினார். இதையடுத்து ஹோட்டலுக்கு சென்ற இந்திய அணியினர்களுக்கு வழி நெடுகிலும் ரசிகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. தொடர்ந்து ஹோட்டலில் நடனக் கலைஞர்களுடன் ரோஹித் சர்மா உற்சாக நடனம் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து  இந்திய வீரர்கள் சாம்பியன்ஸ் ஜெர்சியை அணிந்து கொண்டு பிரதமர் மோடியை இன்று காலை சந்திக்கச் சென்றனர். அப்போது பிரதமர் மோடியுடன் இந்திய அணியினருக்கு சிறப்பு காலை விருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. 

இதையடுத்து இன்று மாலை 7 மணிக்கு மும்பையின் வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதற்காக மும்பை செல்லவுள்ள இந்திய அணியினர், இன்று மாலை 5 மணிக்கு மரைன் ட்ரைவில் இருந்து வான்கடே மைதானம் வரை திறந்தவெளி பேருந்தில் உலகக் கோப்பையோடு ஊர்வலம் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Cricket Team Met PM Modi After Returning India


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->