நாயகன் மீண்டும் வருகிறார் | சச்சினை பின்னுக்கு தள்ளி சாதனை புரிந்த விராட் கோலி!
VIRAT KOHLI GETS HIS 73RD
இந்தியா-இலங்கைக்கு இடையான முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன், அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலிக்கு இது 43 வது ஒரு நாள் சதம் ஆகும். மொத்தமாக சர்வதேச போட்டிகளில் விராட் கோலியின் இது 73 ஆவது சதமாகும்.
மேலும் இலங்கை அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்து சாதனைப்படைத்துள்ளார். இரண்டாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 8 சதங்களுடன் உள்ளார்.
இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி இந்திய தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க ரோஹித் சர்மா 83 ரன்கள், கில் 70 ரங்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி 87 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார். 12 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அதில் அடங்கும்.
தற்போது வரை இந்திய அணி 48.2 ஓவர்களில், 7 விக்கெட் இழப்பிற்கு, 364 ரன்கள் ரன்களை சேர்த்துள்ளது.
English Summary
VIRAT KOHLI GETS HIS 73RD