முதல் சதம்! அதிரடி காட்டிய அபிஷேக் ஷர்மா! ஜிம்பாப்வேவை கதற கதற அடிக்கும் இந்திய வீரர்கள்! - Seithipunal
Seithipunal


ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதம் விளாசியுள்ளார் இந்திய இளம் வீரர் அபிஷேக் ஷர்மா.

ஹராரேயில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் சுப்மன் கில் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க, அபிஷே ஷர்மாவுடன் கைகோர்த்த ருத்ராஜ் கெய்க்வாட் அசத்தலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில், ஆரம்பத்தில் சற்று நிதானமாக ஆடிய அபிஷேக் சர்மா 33 பந்துகளில் அரை சதம் கடந்தார். பின்னர், ஐபிஎல் அனுபவத்துடன் வந்த மலை, போன கயிறு என்று காட்டு அடி அடிக்க, அடுத்த 12 பந்துகளில் 100 ரன்களை எட்டினார். 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் தனது முதல் சதமடித்து அவுட்டானார். 

மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக ருத்ராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்து ஆடிவருகிறார். தற்போதுவரை இந்திய அணி இரு விக்கெட் இழப்பிற்கு, ஓவர்களில், ரன்கள் எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ZIMvIND Abhishek Sharma 100


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->