சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திடீர் சோதனை! சிக்கிய 10 கிலோ கஞ்சா! - Seithipunal
Seithipunal


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் எண்ணிக்கையும் போதைப் பொருள் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே போதைப்பொருள் கடத்தல் சம்பவம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா,ஹான்ஸ்,குளிப் போன்ற பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக காவல்துறை பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வபோது வாகன சோதனையில் ஈடுபட்டு கடத்தி வரப்படும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கி வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதை 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜகான் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 kg ganja seized at Chennai Central railway station


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->