என்னது!!! 19 மின்சார ரயில்கள் ரத்தா....!!! - தெற்கு ரயில்வே அறிவித்தது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் வருகிற 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில்,  சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்திலுள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே மதியம் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளதில் கூறியிருப்பதாவது,"
முழுவதுமாக ரத்து:
மூர்மார்க்கெட்டிலிருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 10.30  மற்றும் 11.35 மதியம் 1.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து இதே தேதிகளில் மதியம் 1, மாலை 3.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்களும் ரத்துசெய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 5.40, 10.15, மதியம் 12.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இதேதேதிகளில் காலை 12.35, மதியம் 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்களும் ரத்துசெய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதியம் 12.40, 2.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து இதேதிகளில் மதியம் 2.30, மாலை 3.15, 4.30 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டையில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து இதேதேதிகளில் காலை 10.20 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்துசெய்யப்படுகிறது.ஆவடியில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 4.25 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் பயணிகள் ரெயில் ரத்துசெய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து:
செங்கல்பட்டில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.

கும்மிடிப்பூண்டியிலிருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்துசெய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்." எனத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

19 electric trains cancelled for Maintenance work Southern Railway announce


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->