மதுரை : சோதனையில் சிக்கிய 21 கிலோ கஞ்சா.! 2 வாலிபர்கள் கைது - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்திய இரண்டு பேரை கைது செய்த போலீசார் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம் கூடல்புதூர் போலீசார், எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே குடோன் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தது கஞ்சா கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அருள்தாஸ்புரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (22) மற்றும் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த விஜயேந்திரன்(23) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 arrested for 21 kg Ganja seized in madurai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->