கொடைக்கானலில் 2 யானைகள் உயிரிழப்பு!...வெளியான அதிர்ச்சி காரணம்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 வாரங்களில் 2 யானைகள் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம் 12-ம் தேதி வெண்களை பகுதியில் ஒரு ஆண்யானை உயிரிழந்தது. முன்னதாக வட கவுஞ்சி பகுதியில் மற்றோரு யானையும் உயிரிழந்தது.

இது குறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானைகளை பரிசோதனை மேற்கொண்டனர். இது குறித்த விசாரணையில், யானைகள் உயிரிழந்த பகுதிகளில் உள்ள ஓடைகளில் யூரியா, பூச்சிக்கொல்லி உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.

இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட விளைநிலங்களை யானைகள் உண்டுவதற்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக, பூச்சிக்கொல்லி மருந்து வியாபாரிகளுக்கு வனத்துறை நோட்டிஸ் வழங்கியது. அந்த நோட்டிஸில், யூரியா, பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாக்கெட்டுகளை முறையாக அகற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அந்த பகுதி விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட  விளைநிலங்களை யானைகள் உண்டால் சில மாதங்கள் கழித்தே உயிரிழக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 elephants died in kodaikanal the reason for the shock


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->