கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள இரண்டு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு திசைவேக காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. 

இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. அதன் படி இன்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா உள்ளிட்ட இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 talukas leave for heavy rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->