நள்ளிரவில் பயங்கரம் - மணல் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - பயணிகளின் கதி என்ன?
20 more than peoples injured for govt bus lorry accident in trichy
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து, திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த மணல் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அரசுப் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இதில், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அந்தத் தகவலின் படி விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான அரசு பேருந்தையும், லாரியையும் கிரேன் மூலம் மீட்டு போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
20 more than peoples injured for govt bus lorry accident in trichy