பண்ருட்டி || பெட்ரோல் பங்கில் சிக்கிய 2000 லிட்டர் மெத்தனால் - அதிரடி காட்டிய போலீசார்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65 போ் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரைக்கும் இந்த சம்பவம் தொடர்பாக  க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாதேஷை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பண்ருட்டி அருகே ஒரு பெட்ரோல் பங்கில் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்தார்.

அந்த வாக்கு மூலத்தின் படி பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்கிற்கு சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அதில், கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் இரண்டாயிரம் லிட்டர் மெத்தனால் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

உடனடியாக அதனை பறிமுதல் செய்த போலீசார் பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர். இருப்பினும், பெட்ரோல் பங்கில் உள்ள அனைத்து டேங்குகளையும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2000 litter methanal seized in panruti petrol bunk


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->