மேல்மருவத்தூரில் 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்கும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இருமுடி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 2 நிமிடம் நின்று செல்வதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- 

"ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரை சென்னை - திருச்சி செல்லும் ராக்போர்ட் அதிவிரைவு ரெயிலும், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை சென்னை - செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலும், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை மதுரையில் இருந்து வரும் சென்னை எழும்பூர் வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலும், மதுரையில் இருந்து வரும் சென்னை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.

இதேபோல், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை செங்கோட்டை - தாம்பரம் வரும் அதிவிரைவு ரெயிலும், ஜனவரி 2-ந்தேதி முதல் பிப்ரவரி 9-ந்தேதி வரை செங்கோட்டையில் இருந்து வரும் தாம்பரம் வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலும், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரை நாகர்கோவிலில் இருந்து வரும் தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் நின்றுச் செல்லும்.

மேலும், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரை காரைக்காலில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். இவ்வாறாக மொத்தம் 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

28 express trains stop in melmaruvathur railway station


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->