மேல்மருவத்தூரில் 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்கும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு.!
28 express trains stop in melmaruvathur railway station
இருமுடி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 2 நிமிடம் நின்று செல்வதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
"ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரை சென்னை - திருச்சி செல்லும் ராக்போர்ட் அதிவிரைவு ரெயிலும், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை சென்னை - செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலும், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை மதுரையில் இருந்து வரும் சென்னை எழும்பூர் வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலும், மதுரையில் இருந்து வரும் சென்னை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.
இதேபோல், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை செங்கோட்டை - தாம்பரம் வரும் அதிவிரைவு ரெயிலும், ஜனவரி 2-ந்தேதி முதல் பிப்ரவரி 9-ந்தேதி வரை செங்கோட்டையில் இருந்து வரும் தாம்பரம் வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலும், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரை நாகர்கோவிலில் இருந்து வரும் தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் நின்றுச் செல்லும்.
மேலும், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரை காரைக்காலில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். இவ்வாறாக மொத்தம் 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
28 express trains stop in melmaruvathur railway station